திருநெல்வேலியின் வரலாறு (9 of 14)

திருநெல்வேலி
 
மாவட்டத் தலைநகர் சுமார் 850 ச.கி.மீ பரப்பளவுள்ளது. மூன்று கால்வாய்களிலிருந்து நீர் பெறுகிறது. மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இந்நகர் வழியே செல்கிறது. புகைவண்டி சந்திப்பு நிலையமாக உள்ளது. மாவட்டத் தலைமை அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், கல்வி, மருத்துவம் போன்றவைகள் அமைந் துள்ளன. எல்லாவகையான பொருட்களுக்கும் சிறந்த சந்தையாக இந்நகரம் செயல் படுகிறது.
 
இங்குள்ள நெல்லையப்பர் கோவில் புகழ்பெற்றது. ஐவகை மன்றங்களில் இங்குள்ளது செம்பு மன்றம். நடுவில் உள்ள மணி மண்டபத்தில பெருங்கல்தூண் உள்ளன. ஒவ் வொன்றும் தனித்தனிச் சுரம் எழுப்பும் தன்மை உடையன. இங்கு வெள்ளை நந்தி உள்ளது. இக்கோவிலில் நுட்பமான வேலைகளைக் காணலாம். இறைவன் 'வேய்முத்த நாதன்'. அம்மை : காந்திமதியம்மை.
 
இராதாபுரம்
 
வட்டத் தலைநகர் 'ராஜராஜபுரம்' என்பதே ராதாபுரமாயிற்று. இதன் பரப்பளவு 1563 ச.கி.மீ. இப்பகுதிகளில் மணற்காடு மிகுதி. பொதி மாட்டின் மீதே பொருள்கள் கொண்டு சொல்லப்படுவது இன்றும் இங்கு வழக்கம். இராதாபுரம் சிவன் கோவில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. இப்படி சேரும் மஞ்சளை ஏலம் போடுவது வழக்கம்.
 
பாளையங்கோட்டை
 
நாயக்கன் காலத்தில் படைத்தலைவராக விளங்கிய அரியநாத முதலியார் கட்டிய கோட்டையில் பாளையங்கள் (படை) தங்கி இருந்தததால் இவ்வூர் பாளையங்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் நிறைய காணப்படுவதால் சின்ன ஆக்ஸ்போட் என்றும் அழைக்கப்படுகிறது. சேசு சபையினர் நடத்தும் புனித சவேரியார் கல்லூரி புகழ் பெற்றதாகும். இங்கு நிறைய கிருத்துவக் கோயில்கள் உள்ளன. இங்கிலீஸ் சர்ச், பிரான்சிஸ் தேவாலயம், செயின்ட் அந்தோணி ஆப் பாதுரா முதலியவை முக்கியமானவை. பாளையங்கோட்டையும், திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாகும்.
 
சீவலப்பேரி
 
இங்கு சிற்றாறு, கயத்தாறு, பொருநை என்ற மூவாறுகளும் கூடுவதால் முக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை, ஆவணி மாதங்களில் மாட்டுச் சந்தை நடைபெறும்.


Favorite tags



Tirunelveli Business Directory