» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வானிலை நிலவரம் காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ஏவப்படும் தேதி மாற்றம்
வெள்ளி 22, நவம்பர் 2019 10:36:58 AM (IST)

வானிலை நிலவரம் காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47, சி-48 மற்றும் சி-49 ஆகிய 3 ராக்கெட்டுகளில், வெளிநாடுகளை சேர்ந்த 14 சிறிய செயற்கைகோள்களை டிசம்பர் இறுதிக்குள் விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட்டுகளில் வெளிநாட்டு செயற்கைகோள்களுடன், இஸ்ரோ தயாரித்த தலா 3 பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
அதன்படி, வருகிற 25-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் ராக்கெட் ஏவும் பணி 25-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிக்கு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை, வருகிற 25-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போதுள்ள வானிலை நிலவரம் காரணமாக ராக்கெட் ஏவும் பணி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 27-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுண்ட்டவுன் 25-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டுக்கு சொந்தமான 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது.
பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைகோள் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைகோள் 509 கி.மீ. உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போது ராக்கெட் பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தர பிரதேசம் மாறிவருகிறது: காங்கிரஸ் விமர்சனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:44:58 AM (IST)

ராகுல் காந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் : பாஜக பதிலடி
சனி 7, டிசம்பர் 2019 5:21:47 PM (IST)

பெண்களை பாதுகாக்க இயலாத ஆதித்யநாத் அரசு நீக்கப்படவேண்டும்: அகிலேஷ் யாதவ் தர்ணா
சனி 7, டிசம்பர் 2019 4:26:07 PM (IST)

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு இந்தியா தலைநகராகிவிட்டது - ராகுல் விமர்சனம்
சனி 7, டிசம்பர் 2019 3:50:41 PM (IST)

தெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை தொடக்கம்
சனி 7, டிசம்பர் 2019 3:37:14 PM (IST)

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை
சனி 7, டிசம்பர் 2019 12:16:27 PM (IST)
