» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகாராஷ்டிராவில் சிவசேனை கூட்டணி ஆட்சி 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது: நிதின் கட்கரி!
வெள்ளி 22, நவம்பர் 2019 4:28:02 PM (IST)
மகாராஷ்டிராவில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சியமைத்தாலும் அது 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனை ஆட்சி அமைத்தாலும் அது 6 முதல் 8 மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மூன்று கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளை கடைபிடிப்பதால் கூட்டணி ஆட்சி நீடிக்காது என்று கூறினார்.
மேலும் அவர், இந்த கூட்டணிக்கு சந்தர்ப்பவாதம் மட்டுமே அடிப்படை. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் இணைகின்றன. இந்த கூட்டணி அரசு அமையுமா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. அப்படியே ஒருவேளை அமைந்தாலும், 6 முதல் 8 மாதத்திற்கு மேல் நீடிக்காது. கிரிக்கெட்டிலும் சரி, அரசியலிலும் சரி எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஹிந்துத்துவா அடிப்படையிலே பாஜக, சிவசேனையுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், எங்களால் முடிந்தவரை முயன்றோம். கூட்டணியின் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தர பிரதேசம் மாறிவருகிறது: காங்கிரஸ் விமர்சனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:44:58 AM (IST)

ராகுல் காந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் : பாஜக பதிலடி
சனி 7, டிசம்பர் 2019 5:21:47 PM (IST)

பெண்களை பாதுகாக்க இயலாத ஆதித்யநாத் அரசு நீக்கப்படவேண்டும்: அகிலேஷ் யாதவ் தர்ணா
சனி 7, டிசம்பர் 2019 4:26:07 PM (IST)

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு இந்தியா தலைநகராகிவிட்டது - ராகுல் விமர்சனம்
சனி 7, டிசம்பர் 2019 3:50:41 PM (IST)

தெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை தொடக்கம்
சனி 7, டிசம்பர் 2019 3:37:14 PM (IST)

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை
சனி 7, டிசம்பர் 2019 12:16:27 PM (IST)
