» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நெய்வேலி விபத்து: உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் - தமிழக முதல்வருடன் அமித் ஷா பேச்சு
புதன் 1, ஜூலை 2020 5:33:25 PM (IST)
நெய்வேலி மின் உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

அப்போது, அங்கு பணியிலிருந்த தொழிலாளர்கள் சுமார் 17 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நெய்வேலி மின்உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.
நிவாரணப் பணிகளுக்கு உதவ, ஏற்கெனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விபத்தினால் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
சனி 23, ஜனவரி 2021 5:47:28 PM (IST)

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு
சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)

எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாவிட்டால் இந்தியாவும் பின்வாங்காது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
சனி 23, ஜனவரி 2021 4:47:37 PM (IST)

பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி
சனி 23, ஜனவரி 2021 3:25:26 PM (IST)

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா்: பிரதமா் மோடி
சனி 23, ஜனவரி 2021 11:27:29 AM (IST)
