» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக சீன செயலிகளுக்கு தடை: மத்திய அமைச்சர் விளக்கம்
வியாழன் 2, ஜூலை 2020 4:53:32 PM (IST)
சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை டிஜிட்டல் ஸ்டிரைக் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீன ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலையடுத்து, இருநாட்டு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை டிஜிட்டல் ஸ்டிரைக் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பிற்காக நாம் 59 செயலிகளை தடை செய்துள்ளோம். நமது எல்லையை மீது கண் வைப்பவர்களை எப்படி எதிர்கொள்வது, நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவல் டிஜிட்டல் ஸ்டிரைக் கூட செய்ய முடியும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: பிரதமர் தொடக்கி வைத்தார்
சனி 16, ஜனவரி 2021 12:08:01 PM (IST)

சபரிமலையில் மகர விளக்கு பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 16, ஜனவரி 2021 9:08:31 AM (IST)

வேளாண் சட்டங்கள் தொடர்பான 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி
வெள்ளி 15, ஜனவரி 2021 6:41:02 PM (IST)

விவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்
புதன் 13, ஜனவரி 2021 5:01:14 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை
புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)
