» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரனோவிற்கு எதிரான போரை மக்கள் பண்டிகைக்காக நிறுத்தி விடக்கூடாது : பிரதமர் மோடி
செவ்வாய் 20, அக்டோபர் 2020 6:56:57 PM (IST)
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து வரும் வரை நாம் அதற்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதில் கொரோனா வைரஸுக்கு எதிராக போரை மக்கள் நீண்ட நாட்களாக செய்து வருவதாக தெரிவித்தார். பொருளாதாரம் மெல்ல மேம்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன் பொறுப்புகளுக்காக அனைவரும் வீட்டிலிருந்து வெளி செல்வதாகவும், பண்டிகை காலம் என்பதால் மார்க்கெட்டுகளும் மெல்ல கலைகட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
பொதுமுடக்கம் முடிவிற்கு வந்தாலும், கொரோனா வைரஸ் முடிவுக்கு வரவில்லை என்பதை உணர வேண்டும் என்றும், கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்கள் கொடுத்த ஒத்துழைப்பால், இன்று அனைவரும் ஒரு மோசமான நிலையை தவிர்த்திருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் கூறினார்.
வளர்ந்த பிற நாடுகளை விடவும், இந்தியாவில் குறைந்த கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், கொரோனாவிற்கு எதிரான போரில் பரிசோதனைகளை அதிகரித்தது பெரும் பலமாக மாறியதாகவும் பிரதமர் தெரிவித்துக்கொண்டார். பலர் முகக் கவசம் இன்றி அலட்சியமாக இருப்பதை காண முடிவதாகும், அவ்வாறு செல்பவர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தார். எனவே கொரோனாவை அலட்சியமாக நினைக்காமல், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்புப்போட்டுக் கழுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பண்டிகை காலத்தில் கூடுதல் கவனம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: பிரதமர் தொடக்கி வைத்தார்
சனி 16, ஜனவரி 2021 12:08:01 PM (IST)

சபரிமலையில் மகர விளக்கு பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 16, ஜனவரி 2021 9:08:31 AM (IST)

வேளாண் சட்டங்கள் தொடர்பான 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி
வெள்ளி 15, ஜனவரி 2021 6:41:02 PM (IST)

விவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்
புதன் 13, ஜனவரி 2021 5:01:14 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை
புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)
