» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவிப்பு
திங்கள் 11, ஜனவரி 2021 8:37:20 PM (IST)
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200 என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 200 என நிர்ணயித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணி நாளை காலை தொடங்கும் என்றும் சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் மத்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தனியாருக்கு தடுப்பூசிகளை வழங்கும் பட்சத்தில் இதைவிட அதிகமான விலைக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 200 என நிர்ணயித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணி நாளை காலை தொடங்கும் என்றும் சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் மத்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தனியாருக்கு தடுப்பூசிகளை வழங்கும் பட்சத்தில் இதைவிட அதிகமான விலைக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை
புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)

விவசாயிகளின் போராட்டத்தின் அடிப்படையே பிரதமர் மோடிக்கு புரியவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதன் 20, ஜனவரி 2021 11:50:06 AM (IST)

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:05:49 PM (IST)

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 13பேர் லாரி ஏறி பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:03:49 PM (IST)

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சந்திப்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:58:12 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:52:58 PM (IST)
