» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு
சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்பொழுது, நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவம் என்றொரு அமைப்பினை உருவாக்கி அதில், குஜராத், வங்காளம் மற்றும் தமிழகம் உள்பட ஒவ்வொரு மக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டார். பிரிட்டிஷாரின் நம்மை பிரித்து, ஆட்சி செய்யும் கொள்கைக்கு எதிராக நின்றவர் என்று கூறினார்.
இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் கட்டாயம் தேவை. இங்கிலாந்து ஆட்சியாளர்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டு இந்தியா முழுவதும் ஆட்சி செய்தனர். நம்முடைய நாட்டில் ஏன் ஒரே ஒரு தலைநகரம் இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தேசநாயகர் தினம் என்று நாம் இன்று கொண்டாடி வருகிறோம். ஏனெனில் நேதாஜியை ரவீந்திரநாத் தாகூர் தேசநாயகர் என அழைத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது : கேஜ்ரிவால் அறிவிப்பு
வியாழன் 4, மார்ச் 2021 5:34:02 PM (IST)

கேரள சட்டசபை தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தேர்வு!!
வியாழன் 4, மார்ச் 2021 5:20:34 PM (IST)

ஆபாச வீடியோ விவகாரம் : கர்நாடக அமைச்சர் ஜார்கிகோளி ராஜினாமா
வியாழன் 4, மார்ச் 2021 8:33:31 AM (IST)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
புதன் 3, மார்ச் 2021 4:56:35 PM (IST)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: மன்மோகன் குற்றச்சாட்டு
புதன் 3, மார்ச் 2021 12:14:02 PM (IST)

இந்தியாவில் 2030க்குள் 23 நீர்வழிப் பாதைகள் செயல்படுத்த இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:41:31 PM (IST)
