» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:25:13 PM (IST)
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி போடும் முதற்கட்டப் பணியை கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 1.30 கோடிக்கும் அதிகமான முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு அதிகமானோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோ-வின் செயலியில் இரண்டாம் கட்டத்திற்கு ஏற்ப புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்கள் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக்கொலை: ஆந்திராவில் பயங்கரம்!!
வியாழன் 15, ஏப்ரல் 2021 4:58:53 PM (IST)

மேற்குவங்கத்தில் பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி
வியாழன் 15, ஏப்ரல் 2021 10:25:00 AM (IST)

இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று : புதிய உச்சத்தை தொட்டது கரோனா
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:00:35 AM (IST)

ஹரித்துவாரில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்: கரோனா விதிமுறைகளை காற்றில் பறந்தது!!
வியாழன் 15, ஏப்ரல் 2021 8:55:25 AM (IST)

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பினராயி விஜயன் கோரிக்கை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:44:03 PM (IST)

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:22:18 PM (IST)
