» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார் வாங்க 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர்: உபியில் கொடூர சம்பவ‌ம்

வெள்ளி 14, மே 2021 7:35:54 PM (IST)

கார் வாங்குவதற்காக தங்களது 3 மாத ஆண் குழந்தையை பெற்றோர்களே ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணாஜில் பகுதியில் உள்ள திருவா கோட்வாலியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு 3 மாதமேயான ஆண் குழந்தை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு தங்களது குழந்தையை அவர்கள் விற்றுள்ளனர்.  இந்நிலையில் தம்பதியினரின் வீட்டிற்கு வந்த குழந்தையின் தாத்தா இல்லத்தில் குழந்தை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் திருவா கோட்வாலி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் குழந்தையின் பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்குவதற்காக குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.  இந்நிலையில் பெற்றோரை கைது செய்த காவல்துறையினர் இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலதிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளனர். கார் வாங்குவதற்காக சொந்த குழந்தையையே பெற்றோர்கள் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory