» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது : பிரதமர் மோடி

சனி 15, மே 2021 9:06:33 AM (IST)

கடினமான தருணங்களில் நம்பிக்கையை இழக்கிற நாடு இந்தியா இல்லை. கரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

‘பி.எம்.கிசான்’ திட்டத்தின் 8-வது தவணையாக 9½ கோடி விவசாயிக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வங்கிக்கணக்குகளில் செலுத்தும் நிகழ்ச்சி, காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது. இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நூற்றாண்டுக்கு ஒரு முறை வருகிற பெருந்தொற்றுநோய், உலகுக்கே சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில் இது நம் முன்னே கண்ணுக்குத் தெரியாத எதிரியாக உள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசு முழுபலத்துடன் போராடுகிறது. நாட்டின் வலியைக் குறைப்பதற்காக அரசின் ஒவ்வொரு துறையும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றன. விரைவாக இன்னும் இன்னும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒன்றுபட்டு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதுவரை ஏறத்தாழ 18 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் முறை வரும்போது தடுப்பூசிக்கு பதிவு செய்ய வேண்டும். எல்லா நேரங்களிலும் கரோனா கால நடத்தைகள் பின்பற்றப்பட வேண்டும். கரோனாவுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்வதற்கு தடுப்பூசி முக்கியமான வழிமுறை ஆகும். மேலும் இது கடுமையான நோய் அபாயத்தைக்குறைக்கும்.

இந்த கடினமாக தருணத்தில் ஆயுதப் படைகள், ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்வதற்கு முழு பலத்துடன் செயல்படுகின்றன. ரெயில்வே துறையும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குகிறது. நாட்டின் மருந்துத்துறை பெரிய அளவில் மருந்துகளைத் தயாரித்து வினியோகித்து வருகின்றன. கடினமான தருணங்களில் நம்பிக்கையை இழக்கிற நாடு இந்தியா இல்லை. இந்த சவாலை கடுமையான வலிமையுடனும், அர்ப்பணிப்புடனும் நாடு சமாளிக்கும். கிராமப்புறங்களிலும் கரோனா பரவுகிறது. அந்தந்த பகுதிகளில் முறையான விழிப்புணர்வையும், சுகாதாரத்தையும் கிராம பஞ்சாயத்துகள் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory