» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்களுடன் உணவகங்கள் செயல்பட அனுமதி: மம்தா
வெள்ளி 4, ஜூன் 2021 11:09:03 AM (IST)
மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களைக் கொண்டு மாலை 5 மணி முதல் 8 மணி வரை உணவகங்கள் செயல்பட முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி வழங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி இன்று இந்த தளர்வை அறிவித்துள்ளார்.அதில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் அதிகரித்து வரும் நிலையில், இங்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. உணவங்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களுடன் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.