» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தடுப்பூசிதான் கரோனா என்னும் அரக்கனை வீழ்த்தும் ஒரே ஆயுதம் - பிரதமர் மோடி உரை!!
திங்கள் 7, ஜூன் 2021 5:51:34 PM (IST)
கரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் கரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் பெரும்பாலான நாடுகள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.
கரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். கரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். கரோனா தொற்றால் மருத்துவ துறையில் அடிப்படை வசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு உயர்த்தியிருக்கிறோம்.
அனைத்து கட்டமைபைப்புகளையும் பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மக்களை காப்பாற்றுவதற்காக முப்படைகளையும் பயன்படுத்தினோம். தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது என்றார்.