» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள்: 50% பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி
ஞாயிறு 13, ஜூன் 2021 9:27:36 PM (IST)
புதுதில்லியில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில தளர்வுகளை டெல்லி அரசு அனுமதித்துள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயில்கள் மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்குவதற்கும் ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்ஸிகள், இரண்டு பயணிகளுடன் இயங்கவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதியளித்துள்ளார்.
டெல்லியில் வாராந்திர சந்தைகள் நாளை முதல் திறக்கப்படும், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரே ஒரு சந்தை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
*அரசு அலுவலகங்களில் பிரிவு ஏ அதிகாரிகள் 100 சதவீதமும், மற்ற பிரிவுகளில் 50 சதவீத அலுவலர்களும் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய சேவைகள் தொடரும்.
*தனியார் அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் அனைததும் காலை 10:00 மணி முதல், இரவு 8 மணி வரையிலும் செயல்படலாம்.
*கோவில்களை திறக்கலாம். ஆனால், பக்தர்ளுக்கு அனுமதி கூடாது.
என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தடை தொடரும்
* பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கிடையாது.
* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு தடை நீடிக்கும்
* நீச்சல் குளங்கள், மைதானங்கள், விளையாட்டு அரங்குகள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.
* அழகு நிலையங்கள், ஜிம்கள், யோகா நிலையங்கள், பூங்கா, தோட்டங்கள் மூடப்பட்டிருக்கும்.
* ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது.
வீடுகளில் மட்டும் திருமணத்திற்கு அனுமதி கிடைக்கும். அதில் 20 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
* இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
இவ்வாறு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.