» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி., உத்தரகண்ட் சட்டப் பேரவைத்தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு
திங்கள் 28, ஜூன் 2021 11:47:41 AM (IST)
உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி அறிவித்தாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. அப்போது மாயாவதியின் கட்சிக்கு அதிகபட்சமாக 10 இடங்களிலும், சமாஜவாதி கட்சிக்கு 5 இடங்களில் வெற்றி கிடைத்தது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பெரும்பாலான இடங்களில் வென்றது.இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு குறித்த தகவலை மாயாவதி சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், ‘ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தோ்தலைச் சந்திக்க இருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அவை முற்றிலும் தவறானது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை. பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது’ என்று கூறியுள்ளாா்.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் அண்மையில் கூட்டணி அறிவித்தது நினைவுகூரத்தக்கது. இப்போது 65 வயதாகும் மாயாவதி 4 முறை உத்தர பிரதேச முதல்வராக இருந்துள்ளாா். அண்மையில் அவரது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 9 எம்எல்ஏக்கள் சமாஜவாதி கட்சியில் இணைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 கோடி: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
திங்கள் 1, டிசம்பர் 2025 4:51:46 PM (IST)

தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 12:10:50 PM (IST)

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரம் : சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு பதிவு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:47:46 AM (IST)

காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி அழைப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:40:41 AM (IST)

மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
வெள்ளி 28, நவம்பர் 2025 5:05:40 PM (IST)

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்: தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:15:36 PM (IST)




