» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் ஆலோசனை
செவ்வாய் 29, ஜூன் 2021 5:16:02 PM (IST)

ஜம்மு விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா். இந்த தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், லாடகிற்கு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், லடாகில் உள்ள நிலவரம் குறித்தும் விவரிக்கவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:58:15 PM (IST)

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST)

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)
