» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரீசார்ஜ் முறையில் மின்கட்டணம் செலுத்தும் திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதன் 30, ஜூன் 2021 5:44:27 PM (IST)
மின் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்துவதற்காக ரீசார்ஜ் முறை கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மின் கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டுவரவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்க ரூ.19,041 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெள்ளி 19, ஜூன் 2026 12:17:49 PM (IST)

மேகேதாட்டு அணைத் திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி!
வெள்ளி 19, ஜூன் 2026 10:26:04 AM (IST)

திருடனைப் பிடிக்காமல் வீட்டிற்குப் பூட்டுப் போடுவதா? டெலிகிராம் தடைக்கு எதிராக ராகுல் கடும் சாடல்!
புதன் 17, ஜூன் 2026 8:43:08 PM (IST)

டெல்லியைத் தாக்கிய கடுமையான புழுதிப் புயல் : 92 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:23:53 PM (IST)

டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது: மத்திய அரசு அதிரடி
செவ்வாய் 16, ஜூன் 2026 3:22:58 PM (IST)

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:26:40 AM (IST)


