» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
வியாழன் 1, ஜூலை 2021 12:12:37 PM (IST)
இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசிக்கான 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.
 
ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில், அதற்கான அனுமதியை மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மறுத்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சில நாள்களுக்கும் முன்பு தான் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்புட்னிக் லைட் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)




