» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சமையல் எரிவாயு விலை உயர்வு மோடியால் சாத்தியம்: ப.சிதம்பரம் விமர்சனம்!

வியாழன் 1, ஜூலை 2021 5:30:06 PM (IST)

சமையல் எரிவாயு விலை உயர்வு மோடியால் சாத்தியம் என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

கரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கத்துக்கு இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது. இதையடுத்து மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் 14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒரு உருளை ரூ. 834.50 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த நவம்பர், 2020  முதல் ஜூலை, 2021 விலை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது  என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு மோடியால் சாத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில்,  மோடியின் அரசின் சமையல் எரிவாயு உருளை விலைகள் -2020 முதல் 2021 வரை:

நவம்பர் 30, 2020: ₹594

டிசம்பர் 1, 2020: ₹644

ஜனவரி  1, 2021: ₹694

பிப்ரவரி 4, 2021: ₹719

பிப்ரவரி 15, 2021: ₹769

மார்ச் 1, 2021: ₹819

ஜூலை 1, 2021:  ₹834 எனப் பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory