» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சமையல் எரிவாயு விலை உயர்வு மோடியால் சாத்தியம்: ப.சிதம்பரம் விமர்சனம்!
வியாழன் 1, ஜூலை 2021 5:30:06 PM (IST)
சமையல் எரிவாயு விலை உயர்வு மோடியால் சாத்தியம் என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கத்துக்கு இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது. இதையடுத்து மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் 14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒரு உருளை ரூ. 834.50 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த நவம்பர், 2020 முதல் ஜூலை, 2021 விலை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு மோடியால் சாத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், மோடியின் அரசின் சமையல் எரிவாயு உருளை விலைகள் -2020 முதல் 2021 வரை:
நவம்பர் 30, 2020: ₹594
டிசம்பர் 1, 2020: ₹644
ஜனவரி 1, 2021: ₹694
பிப்ரவரி 4, 2021: ₹719
பிப்ரவரி 15, 2021: ₹769
மார்ச் 1, 2021: ₹819
ஜூலை 1, 2021: ₹834 எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
