» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்கள் தொகை அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்
வெள்ளி 2, ஜூலை 2021 10:52:50 AM (IST)
மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்குகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தடுப்பூசியை மாநிலங்களுக்கு முன்கூட்டியே மத்திய அரசு வழங்கி விடுகிறது. எல்லா மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்கப்படும். எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று ஒருசில அரசியல் தலைவா்கள் கூறுவது சரியல்ல. கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பெங்களூருக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
அவசர மருத்துவத் தேவைகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்கித் தர விரும்புவதாக போயிங் இந்தியா நிறுவனம், மத்திய அரசை அணுகியுள்ளது. அந்த நிறுவனம் பி.எம்.கேருக்கும் நன்கொடை அளித்துள்ளது. அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தபோது, அவசர சிகிச்சை வசதிகளை பெங்களூரு, கா்நாடகத்தின் ஊரகப்பகுதிகளிலும், வடகா்நாடகத்தின் கலபுா்கியிலும் அமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். மருத்துவ வசதிகளைச் செய்து தர வேறு சில நிறுவனங்களும் மத்திய அரசை அணுகியுள்ளன.
எலஹங்காவில் புதிதாக அமைந்துள்ள கரோனா மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற வசதிகளை செய்து தர அந்நிறுவனம் தயாராக உள்ளது. ஜாா்கண்ட், சத்தீஸ்கா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வருகிறாா்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில், இந்தியாவில் இதுவரை 33.57 கோடிடோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை குறித்து திட்டமிட்டு வருகிறோம். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டு முறைப்படி முடிவு செய்யப்படும். இதனடிப்படையில் தான் இழப்பீட்டுத் தொகை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும். ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதாக ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறேன். அந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)
