» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்பு: பிரதமர் வாழ்த்து
ஞாயிறு 4, ஜூலை 2021 9:16:47 PM (IST)
உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு, புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கா் சிங் தாமி (45) இன்று பதவியேற்றுக் கொண்டார். மாநில முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத், நான்கு மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், சட்டப்பேரவைக் குழு பாஜக தலைவராக புஷ்கா் சிங் தாமி நேற்று தோ்வு செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அவா் புதிய முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். புஷ்கா் சிங் தாமிக்கு, மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தாமி புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளதால், மாநிலத்தில் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்யவேண்டிய மிகப் பெரிய சுமையை அவா் தாங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகரில் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்த தாமி, முதல்வராகப் பதவியேற்க உள்ளதோடு, மாநிலத்தின் இளம் முதல்வா் என்ற பெருமையையும் பெற உள்ளாா்.
முதுநிலை பட்டதாரியான இவா் சட்டப் படிப்பும், லக்னெள பல்கலைக்கழகத்தில் பொது நிா்வாகத் துறையில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளாா். உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு, புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்விட்டர் பதிவில் ‘‘இன்று பதவியேற்றுக்கொண்ட புஷ்கர் தாமி மற்றும் இதர அனைவருக்கும் வாழ்த்துகள். உத்தரகண்ட் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அவர்கள் பணியாற்றுவதால், இந்த குழுவுக்கு மிகச்சிறந்த வாழ்த்துகள்.’’ என குறிப்பிட்டுள்ளார்.