» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை வழக்கு கைதான 2பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!
வெள்ளி 9, ஜூலை 2021 4:05:44 PM (IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி வசந்த் விகார் பகுதியில் வசித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி (68) 2 நாட்களுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து கொலையாளிகள் நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வசந்த் விகார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளான சலவைத் தொழிலாளி ராஜீவ் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நகைகள் பற்றி விசாரிக்கவும், கொலை தொடர்பாக மேலும் விவரங்கள் சேகரிக்கவும் அவர்களை போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்று 3 நாள் போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார், குற்றவாளிகள் 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை போன நகைகள் பற்றி கேட்டதற்கு, "வீட்டில் எவ்வளவு நகைகள் இருந்தன? அதில் எவ்வளவு காணாமல் போயிருக்கிறது? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளிடமும் விசாரணை நடக்கிறது. போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு நகைகள் பற்றிய விவரம் தெரியவரும்” என விசாரணை நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)
