» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பஞ்சாபில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து: திரையரங்குகளை திறக்க அனுமதி
சனி 10, ஜூலை 2021 12:40:07 PM (IST)
பஞ்சாபில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு, மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து இரவு நேர மற்றும் வார இறுதி பொதுமுடக்கங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகளாக, உள்ளரங்கில் 100 பேர் மற்றும் வெளியரங்கில் 200 பேருடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு, மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி கூடங்கள் உள்பட அனைத்தும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி!!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:15:11 PM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
சனி 27, டிசம்பர் 2025 3:48:59 PM (IST)

இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:01:58 PM (IST)

கிறிஸ்துமஸ் பொருள்களை அடித்து நொறுக்கிய சம்பவம்: இந்து அமைப்பினர் 4 பேர் கைது!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:08:11 PM (IST)


