» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் இணைக்க முடிவு: மத்திய அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை
சனி 25, செப்டம்பர் 2021 12:34:43 PM (IST)
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதித் துறை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வக்கப்படும். இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.
மூன்றாம் பாலினத்தவரை சம நிலையில், சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயன்பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றால், அரசுப் பணிகளில் அவர்களுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகார் கோவில் திருவிழாவில் பெரும் சோகம்: கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:24:20 PM (IST)

ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலியைக் கொன்று பிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:25:07 PM (IST)

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

