» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் இணைக்க முடிவு: மத்திய அமைச்சரவையிடம் வரைவு அறிக்கை
சனி 25, செப்டம்பர் 2021 12:34:43 PM (IST)
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதித் துறை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வக்கப்படும். இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.
மூன்றாம் பாலினத்தவரை சம நிலையில், சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயன்பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றால், அரசுப் பணிகளில் அவர்களுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)
