» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புனித நூலை அவமதித்ததற்காக இளைஞன் கொடூர கொலை: நிஹாங் சீக்கியர் சரண்!

சனி 16, அக்டோபர் 2021 4:07:43 PM (IST)

புனித நூலை அவமதித்ததற்காக டெல்லி சிங்கு எல்லையில் இளைஞன் ஒருவரை, நிஹாங் சீக்கியர் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லி - அரியானாவின் சிங்கு எல்லையிலும் விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், சிங்கு எல்லையில் உள்ள போராட்ட இடத்தில் இளைஞரின் சடலம், அங்கிருந்த பேரிகார்டு எனப்படும் தடுப்பு வேலியில் தொங்கிய நிலையில் கிடந்தது. அவரது ஒரு கை வெட்டப்பட்டும், உடலின் மற்ற பாகங்கள் வெட்டுக் காயங்களுடன் பேரிகார்டில் தொங்கவிடப்பட்டது. குண்டலி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

கொடூரமான இந்த கொலையை செய்தது சீக்கியக் குழுவான ‘நிஹாங்’ பிரிவை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொடூரமான முறையில் லக்பீர் சிங் (33)  இளைஞரை கொன்ற நிஹாங் பிரிவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவர் நேற்றிரவு போலீசில் சரணடைந்தார். போலீசாரின் விசாரணையில், சீக்கிய மத புனித நூலை (குரு கிரந்த் சாகிப்) அவமதித்ததற்காக, அந்த இளைஞனை கொலை செய்ததாக சரப்ஜித் சிங் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூரமான கொலையின் புகைப்படம், சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


மக்கள் கருத்து

வழக்கறிஞர்Oct 16, 2021 - 09:31:01 PM | Posted IP 108.1*****

இது தாலிபானின் மதமா ?? குற்றவாளிகளை தூக்கில் தான் போடணும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory