» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்துக்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்

சனி 15, ஜனவரி 2022 9:59:27 AM (IST)

இந்துக்களின் மக்கள் தொகை குறையாமல் தடுக்க அவர்கள் குறைந்தது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் கண்ட்வாவில் வி.எச்.பி., மற்றும் பஜ்ரங்தள் சார்பில் இந்து இளைஞர்கள் மாநாடு நடந்தது. இதில் வி.எச்.பி., மூத்த தலைவர் மிலிந்த் பராண்டே பேசியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்ற நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இதை தடுக்க வேண்டும். இல்லாவிடில் இன்னும் 50 ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகி விடுவர். 

இது நாட்டுக்கே ஆபத்தாகிவிடும். இந்தியா மீண்டும் அந்நியரிடம் அடிமைப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும். அதனால் இந்து சமூகத்தை பாதுகாக்க, இந்து இளைஞர்கள் அனைவரும் திருமணத்துக்கு பின், குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால் தான், நாடு முதலில் முஸ்லிம்களிடமும், பின் ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டது.

ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் நாடு கல்வியறிவில் சிறந்து விளங்கியது. இதை சீரழிக்கும் நோக்கில் தான் 'மெக்காலே' கல்வி திட்டத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். இதன் வாயிலாக நம் முன்னோர்களை அறிவில்லாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் என, நம்மிடம் ஆங்கிலேயர்கள் போதித்தனர். மெக்காலே கல்வி திட்டத்தை, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மாற்றியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory