» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன வங்கி முறைகளுக்கு மாற வேண்டும் : அமித் ஷா
வியாழன் 23, ஜூன் 2022 4:16:34 PM (IST)
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன வங்கி முறைகளை பின்பற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் நிலைத்திருக்க நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சமச்சீர் வளர்ச்சியில் கவனம் வேண்டியது அவசியம்.. 1,534 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 54 திட்டமிடப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளன. ஆனால் போதுமான வளர்ச்சி இல்லை. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் கட்டமைப்பு மாற்றங்களும், கணக்கியல் செயல்முறைகளை கணினிமயமாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த துறையில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். தற்போது, மொத்த வங்கித் துறையில் டெபாசிட் மற்றும் முன்பணம் செலுத்துவதில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் பங்கு மிகக் குறைவாக உள்ளது" என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி!!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:15:11 PM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)


