» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

திங்கள் 6, பிப்ரவரி 2023 11:21:48 AM (IST)

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 5 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா, பி.வி. சஞ்சய் குமாா் ஆகியோர் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்கிறது. உச்சநீதி மன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 27 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனா்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலமாக, உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேசமயம் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory