» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:08:21 PM (IST)
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க ஆளுநர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால் என்ன காரணத்துக்காக அவை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது என்கிற விவரம் சொல்லப்படுவது இல்லை என்றும், 2-வது முறையாக மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால் அரசியல் சாசனப்படி அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும், ஆனால் ஆளுநரோ, இந்த மசோதாக்களை கிடப்பில் போடுவது அல்லது ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்கிற போக்குகளை கையாள்கிறார் என்றும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்றும் வாதிடப்பட்டது.
இந்தநிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து அனைத்து தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். ஆளுநர் தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு வாதம் வைத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூபாய் சின்னத்தை நீக்கியது பிரிவினைவாத அரசியல்: தமிழக அரசு மீது சீதாராமன் கடும் விமர்சனம்
வெள்ளி 14, மார்ச் 2025 10:43:27 AM (IST)

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்தினேன் : நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
வியாழன் 13, மார்ச் 2025 5:23:43 PM (IST)

ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!
வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)

மும்மொழி கொள்கையில் திமுக எம்.பி.க்கள் இரட்டை வேடம்: நிர்மலா சீதாரமன் ஆவேசம்
வியாழன் 13, மார்ச் 2025 11:12:57 AM (IST)

செளந்தர்யா திட்டமிட்ட கொலை: நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு - ஆட்சியரிடம் புகார்!
புதன் 12, மார்ச் 2025 3:56:56 PM (IST)

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
