» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா, இலங்கை விமானங்களுக்கு தடை நீட்டிப்பு : இத்தாலி அரசு அறிவிப்பு

ஞாயிறு 30, மே 2021 8:39:15 PM (IST)

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள், இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த தடையானது இத்தாலி அரசால் அமல்படுத்தப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் இந்த தடைமுடிவுக்கு வர இருந்தது.  

இந்த நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21 ஆம் தேதி இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை, வங்காளதேச ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி குடிமக்கள் வருவதற்கு இந்த தடை பொருந்தாது என்றும் இத்தாலி அரசு விளக்கம் அளித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory