» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி - சுமார் 5 ஆயிரம் மக்கள் தவிப்பு!!
சனி 5, ஜூன் 2021 3:33:54 PM (IST)
இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 4பேர் உயிரிழந்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் 6 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் இருவரும் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது..