» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடயை நீக்கிய நீதிமன்றம்: பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

சனி 3, ஜூலை 2021 3:31:18 PM (IST)

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியதால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பிரபல வீடியோ செயலியான டிக் டாக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு நாடுகளில் டிக் டாக் இன்னமும் மிகப்பிரபலமான செயலிகளில் ஒன்றாக உள்ளது.  பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலி லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

எனினும், டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானில் உள்ள  பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டிக் டாக் செயலியில்  ஆபாசமான பதிவுகள்  உள்ளதாகவும் எல்ஜிபிடி (LGBTQ) சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் டிக் டாக் பதிவுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் செயலிக்கு எதிராக சிந்து  நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவு வந்ததால், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிக் டாக்கை தடை செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. அதேவேளையில், ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து,  பாகிஸ்தானில் மீண்டும் டிக் டாக் செயலிக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory