» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் சிக்கியது
புதன் 8, ஜூலை 2020 7:17:18 PM (IST)
கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் பிடிபட்டது. கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரக பகுதிகளான பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், கோட்டை விளைப்பட்டி, முதலியார்பட்டி, அழகப்பபுரம், பங்களா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக கரடிகள் உணவுக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் சுற்றித்திரிந்த 9 கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
இதையடுத்து துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் ஆம்பூர் கால்நடை மருத்துவர் சிவமுத்து, ஆய்வாளர் அர்னால்டு, உயிரியலாளர் ஸ்ரீதரன், கடையம் வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம், வனவர் முருகசாமி, காரையார் பிரிவு வனவர் ஜெகன், வனக்காப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கூண்டில் சிக்கிய கரடியை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த பகுதியில் சிக்கிய 10-வது கரடி இதுவாகும்.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரக பகுதிகளான பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், கோட்டை விளைப்பட்டி, முதலியார்பட்டி, அழகப்பபுரம், பங்களா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக கரடிகள் உணவுக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் சுற்றித்திரிந்த 9 கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
இதையடுத்து துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் ஆம்பூர் கால்நடை மருத்துவர் சிவமுத்து, ஆய்வாளர் அர்னால்டு, உயிரியலாளர் ஸ்ரீதரன், கடையம் வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம், வனவர் முருகசாமி, காரையார் பிரிவு வனவர் ஜெகன், வனக்காப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கூண்டில் சிக்கிய கரடியை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த பகுதியில் சிக்கிய 10-வது கரடி இதுவாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)
