» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக் கொலை : 4பேரிடம் போலீசார் விசாரணை
திங்கள் 23, நவம்பர் 2020 12:29:04 PM (IST)
ஆலங்குளம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியை அடுத்த கடங்கநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனைகுட்டி மகன் சிவன்ராஜ்(23). இவர் அப்பகுதியில் உள்ள பனை நார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரகனி என்பவரை அரிவாளால் வெட்டியதில் அவர் காயமடைந்திருந்தாராம். இதனையடுத்து அப்பகுதியில் சேர்மன் மற்றும் முருகேசன் ஆகியோர் தலைமையில் இரு குழுக்களாக பிரிந்து அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தனராம்.
இந்நிலையில் முருகேசன் குழுவில் உள்ள செல்வக்குமார் மற்றும் ராஜா ஆகியோர் சிவன்ராஜை, நேற்று இரவு மது அருந்த அழைத்துச் சென்றனராம். அப்பகுதியில் உள்ள மணி முத்தா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மூவரும் மது அருந்திய பின்னர், செல்வக்குமார், ராஜா ஆகியோர் சிவன்ராஜை அரிவாளால் வெட்டினராம். படுகாயமடைந்த சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே வீட்டை விட்டு சென்ற சிவன்ராஜ் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்ற போது அவர் தோட்டத்தில் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி எஸ்.பி சுகுணா சிங், ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னி வளவன் மற்றும் ஊத்துமலை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த ஊத்துமலை காவல்துறையினர், 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
