» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்து மரணம்
வியாழன் 3, டிசம்பர் 2020 8:17:58 AM (IST)
குரூப்-4 பணிக்கான கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய சங்கரன்கோவில் இளம்பெண், ரயிலில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். அதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் குருநாதன் (54). இவருடைய மகள் மனிஷாஸ்ரீ (23). இவர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து சென்னையில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தனது தந்தை குருநாதன், அக்காள் கணவர் அய்யனார் (34) ஆகியோருடன் சென்னை சென்றார். அங்கு கலந்தாய்வில் கலந்து கொண்டார். கலந்தாய்வில் அவருக்கு ஊரக மருத்துவ துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவறி விழுந்த பெண் பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு, சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயிலில் ஊருக்கு வந்தனர்.
இந்த ரயில் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையநாயக்கர்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷாஸ்ரீ படிக்கட்டு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து விழுந்ததாக தெரிகிறது. இதையறியாமல் குருநாதனும், அய்யனாரும் ரயிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர். சங்கரன்கோவிலுக்கு ரயில் வந்தவுடன் இறங்கும் போது, மனிஷாஸ்ரீ அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை ரயிலில் தேடினர்.
உடனே அவர்கள் இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார், தண்டவாள பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கோப்பைய நாயக்கர்பட்டி அருகே உள்ள தண்டவாள பகுதியில் மனிஷாஸ்ரீ பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பரிதாபமாக இருந்தது. குரூப்-4 பணி கலந்தாய்வுக்கு சென்று ஊர் திரும்பும் வழியில் ரயிலில் இருந்து மனிஷா ஸ்ரீ விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க காவலாளி தற்கொலை
வெள்ளி 15, ஜனவரி 2021 5:38:38 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
புதன் 13, ஜனவரி 2021 12:31:13 PM (IST)

பைக்கில் வந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
புதன் 13, ஜனவரி 2021 11:55:44 AM (IST)

அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:35:38 AM (IST)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்ததார் - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
செவ்வாய் 12, ஜனவரி 2021 8:47:38 AM (IST)
