» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது: உபரி நீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!!
சனி 9, ஜனவரி 2021 12:10:21 PM (IST)
நெல்லை மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

சனிக்கிழமை காலை அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. இதையடுத்து அணையிலிருந்து 80 அடி கால்வாயில் 400 கன அடியும் மேல் மதகு மூலம் 200 கன அடியும் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின் மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து பொதுமக்கள் அணையை கண்டுகளித்து வருகின்றனர்.
மேலும் வடகிழக்குப் பருவ மழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதாலும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் வேகமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.15 அடியும் அணைக்கு நீர்வரத்து 2061.97 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1942.29 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 144.26 அடியாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
