» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மக்களின் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்க வேண்டும் - எம்பவர் கோரிக்கை!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 10:40:05 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பதற்கு செயலி உருவாக்கம் செய்ய வேண்டும் என எம்பவர் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு, எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பதற்கு வாட்ஸ் அப் செயலி உருவாக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி உருவாக்கப்பட்டால் பொதுமக்கள் எரியாத தெரு விளக்கு, சேதமடைந்த சாலைகள் போன்ற தூத்துக்குடி மாநகராட்சி சம்மந்தமான பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு வசதியாக இருக்கும்.
ஏற்கனவே இதுகுறித்து 28.12.2020 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இத்திட்டத்தை செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
அன்புJan 14, 2021 - 02:44:10 PM | Posted IP 162.1*****
ஏற்கனவே இருக்கிறது...செயல்பாடு தான் எப்படியோ
P.ஆஸ்வால்ட்Jan 12, 2021 - 11:44:07 PM | Posted IP 162.1*****
100% இது தேவை.நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மக்கள் நலன் கருதி வாட்ஸப் செயலி உருவாக்கினால் மிகவும் நலனாக இருக்கும்.
P.ஆஸ்வால்ட்Jan 12, 2021 - 11:44:04 PM | Posted IP 108.1*****
100% இது தேவை.நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மக்கள் நலன் கருதி வாட்ஸப் செயலி உருவாக்கினால் மிகவும் நலனாக இருக்கும்.
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை மீட்பு - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)

KaruppasamyJan 14, 2021 - 03:42:11 PM | Posted IP 108.1*****