» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:35:38 AM (IST)
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
குமரிக் கடல் பகுதியையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 4 நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மணிமுத்தாறு, பாபநாசம் அணையிலிருந்து 3-ஆவது நாளாக தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமாா் 4 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், தொடா் மழையாலும் தாமிரபரணி ஆற்றில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் மூழ்கி உசிலம்பட்டி கல்லூரி மாணவர் பலி: தென்காசி அருகே கோகம்
புதன் 20, ஜனவரி 2021 10:20:30 AM (IST)

பெண் போலீசிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது : 10½ பவுன் நகை - கார் பறிமுதல்
புதன் 20, ஜனவரி 2021 9:04:23 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:09:28 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை : 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 19, ஜனவரி 2021 8:58:10 AM (IST)

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு: ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 18, ஜனவரி 2021 10:43:59 AM (IST)
