» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடியுரிமை திருத்தச்சட்டம் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு
வெள்ளி 19, பிப்ரவரி 2021 3:23:21 PM (IST)
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் இரண்டாவது நாளாக கடையல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது, மத்திய அரசு 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் குடியுரிமை திருத்த மசோதா-2019ஐ கடந்த4.12.2019 அன்று மக்களவையிலும் 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.
இதனையடுத்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர். இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன்கருதி மேல்நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களிடம் ஓட்டு கேட்காமல் தேர்தல் பிரசாரம்: ராகுல்காந்தி மீது திமுக கூட்டணியினர் அதிருப்தி?
திங்கள் 1, மார்ச் 2021 5:11:17 PM (IST)

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம் : பதிவு செய்வது எப்படி?
திங்கள் 1, மார்ச் 2021 4:18:02 PM (IST)

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க புகார் பெட்டி
திங்கள் 1, மார்ச் 2021 4:15:51 PM (IST)

ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை: நெல்லை அருகே பரபரப்பு
திங்கள் 1, மார்ச் 2021 3:52:16 PM (IST)

ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு - ராகுல்காந்தி பேச்சு
திங்கள் 1, மார்ச் 2021 7:59:47 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் : பரிவட்டம் கட்டி வரவேற்பு
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:31:45 PM (IST)
