» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாதுகாப்பற்ற முறையில் கரோனா கழிவுகள் வீச்சு : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 22, பிப்ரவரி 2021 8:42:45 AM (IST)
தூத்துக்குடியில் பாதுகாப்பற்ற முறையில் கரோனா கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொடர்பான மருத்துவ கழிவுகள் மாநகராட்சி மூலம் உரிய பாதுகாப்பன முறையில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் பாதுகாப்புடன் மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்புடன் அழிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை 4 முதல் 5 மணி அளவில் 3-ம் ரயில்வே கேட் பகுதியில் யாரோ மர்ம நபர் டிரைசைக்கிள் மூலம் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் கரோனா தொடர்பான மருத்துவ கழிவுகளை கொட்டி தீவைத்து விட்டு செல்வது தெரியவந்து உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
நேற்று அதிகாலையில் ஒரு நபர் டிரை சைக்கிளில் 4 டிரம்களில் கரோனா நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளான கவச உடை, சிரிஞ்சுகள், முககவசம், கையுறைகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டினாராம். பின்னர் பாதுகாப்பற்ற முறையில் அதற்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்று உள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து மத்தியபாகம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாநகராட்சி தற்காலிக பணியாளர் என்பது தெரியவந்து உள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களிடம் ஓட்டு கேட்காமல் தேர்தல் பிரசாரம்: ராகுல்காந்தி மீது திமுக கூட்டணியினர் அதிருப்தி?
திங்கள் 1, மார்ச் 2021 5:11:17 PM (IST)

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம் : பதிவு செய்வது எப்படி?
திங்கள் 1, மார்ச் 2021 4:18:02 PM (IST)

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க புகார் பெட்டி
திங்கள் 1, மார்ச் 2021 4:15:51 PM (IST)

ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை: நெல்லை அருகே பரபரப்பு
திங்கள் 1, மார்ச் 2021 3:52:16 PM (IST)

ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு - ராகுல்காந்தி பேச்சு
திங்கள் 1, மார்ச் 2021 7:59:47 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் : பரிவட்டம் கட்டி வரவேற்பு
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:31:45 PM (IST)

தூத்துக்குடி ஏரியா காரன்Feb 22, 2021 - 09:46:59 AM | Posted IP 173.2*****