» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை : சார் ஆட்சியர் விசாரணை!!
சனி 3, ஏப்ரல் 2021 10:29:57 AM (IST)
தூத்துக்குடி அருகே திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மீராதேவி (27), இந்த தம்பதியருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மீராதேவிக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருமாம். அதற்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்குள்ள நோயை குத்திக்காட்டி கணவரும், மாமியாரும் மீராதேவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த மீராதேவி அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்து்ககுடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவம் தொடர்டபாக தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலருவி சிறப்பு ரயில் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே
வியாழன் 15, ஏப்ரல் 2021 5:50:10 PM (IST)

வெடிகுண்டு பிரிவில் பணியாற்றி இறந்த மோப்ப நாய் பிராவோக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
வியாழன் 15, ஏப்ரல் 2021 12:25:25 PM (IST)

பாதாள சாக்கடை குழியில் பைக்குடன் விழுந்த வாலிபர் : நெல்லை டவுனில் பரபரப்பு
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:04:18 AM (IST)

பாபநாசம் சிவன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா : பக்தர்களுக்கு தடை; வெறிச்சோடிய தாமிரபரணி!!
புதன் 14, ஏப்ரல் 2021 12:48:36 PM (IST)

முக கவசம் அணியாத 591 பேருக்கு ரூ.123 லட்சம் அபராதம்
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:24:58 PM (IST)

பாளை. அரசு சித்தா மருத்துவமனையில் கரோனா சிகிச்சை ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:19:19 PM (IST)

LEGALApr 5, 2021 - 03:26:56 PM | Posted IP 162.1*****