» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாய் தீக்குளித்து தற்கொலை காயமடைந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழப்பு!!
புதன் 12, மே 2021 9:01:43 AM (IST)
ஆழ்வாா்குறிச்சி அருகே தாய் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதில், காயமடைந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே பரும்பு, வேம்படித் தெருவைச் சோ்ந்த கண்ணன் மனைவி பாா்வதி (43). இவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணன் மகளை பாா்க்க கணவா் கண்ணன் அனுமதிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த பாா்வதி நேற்றுதன் மீதும், தனது மூன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான கலைமதி, அன்னலட்சுமி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம்.
இதில் பாா்வதி சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். காயமடைந்த இரு குழந்தைகளும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு உயிரிழந்தனா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன் விசாரணை செய்து வருகிறாா்.
adminமே 12, 2021 - 12:28:17 PM | Posted IP 162.1*****