» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி: துபாயில் முப்பெரும் வெற்றி விழா கொண்டாட்டம்!
புதன் 12, மே 2021 10:56:52 AM (IST)
துபாயில் தி.மு.க நிர்வாகிகள் சார்பில் திமுக வெற்றி விழா, மு.க.ஸ்டாலின் பதவியேற்பை கொண்டாடும் விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடந்தது.
தமிழகத்தில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அமீரக தி.மு.க அமைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் இந்த விழா நடந்தது. விழாவில் அமீரக தி.மு.க துணை அமைப்பாளர் பிளாக் துளிப் வரவேற்புரை வழங்கினார். இந்த விழாவில் துபாய் தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் (Board of Director Dubai Chamber of commerce and Industries and Chairman , Government of Dubai - Awqaf Endowment funds) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் கூறியதாவது:- தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கி தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் முக ஸ்டாலினுக்கும், திமுக அமைச்சரவைக்கும், உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வருடத்திற்கு இரண்டு மூன்று முறை சென்னை, தமிழகத்திற்கு வந்து செல்கிறேன். முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைத்து, சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
வளைகுடா நாடுகளை சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து செல்கின்றனர். அவர்களும் பலனடையும் வகையில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி இந்திய- அரபுகளுக்கான உறவு பாலமாக தி.மு.க ஆட்சி அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று ர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அமீரக தி.மு.க அமைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ் மீரான் கூறுகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மகத்தான வெற்றியை பெற்று, தமிழக முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். உழைப்பு என்பதற்கு அடையாளமாக திகழும் தமிழக முதல்வருக்கு பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சியினரையும் எஸ்.எஸ் மீரான் கேட்டுக் கொண்டார்.
விழாவில் அமீரக மூ.லீக் தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, DTS ஜெயந்தி மாலா, பவர் குரூப் MD, ஜாஹிர் ஹுசேன், Allied Motors காமால், ஆட்டோ விசண் பைரோஸ் , கல்ஃப் நியூஸ் சதீஷ், துபாய் லேடிஸ் அசோசியேசன் தலைவர், மீனாகுமாரி பத்மநாபன், ஜெஸிலா ரியாஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.