» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெற்றோரின் குடும்ப பிரச்சனையால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 14, மே 2021 7:35:11 AM (IST)

தட்டார்மடத்தில் பெற்றோரின் குடும்ப பிரச்சனையால் சிறுவன்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் நயினார்புரத்தைச்  சேர்ந்தவர் சுயம்புலிங்கம்  மகன் சிவபாலகிருஷ்ணன் (17).  இவர் அதே பகுதியில் அவரது தந்தையுடன் இணைந்து  மளிகை கடை நடத்தி  வந்தார்.  இவருக்கு கூட பிறந்தது 8 சகோதரி, 6 சகோதரர்கள் உள்ளனர். அதில்  சகோதரிகளுக்கு திருமணமாகி அனைவரும் வெளியூரில் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 9ஆம்தேதி சிவபாலகிருஷ்ணன் தந்தை சுயம்புலிங்கத்துக்கும், தாயார் பொன்மணிக்கு வாங்கிய டிவிக்கு தவணை கட்டுவது தொடர்பாக வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர் செட்டிவிளையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

அம்மா கோபித்து கொண்டு சகோதரி வீட்டுக்கு சென்றது சிவபாலகிருஷ்ணனுக்கு  பிடிக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.   நேற்று சிவபாலகிருஷ்ணன், மளிகை கடையில் இருந்த போது அவரது தந்தை, கடைக்கு பூட்டிவிட்டு  அவர் நடத்திவரும் புரோட்டா கடைக்கு வருமாறு கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் கடைக்கு வரவில்லை. இதனால் வீட்டில் போய் பார்த்துள்ளார். அங்குள்ள குளியலறையில் அவர் தூக்கிட்டு தறகொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து அவரது தந்தை  தட்டார்மடம் போலீசில்   காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் காவல் ஆய்வாளர்  சாம்சன் ஜெபதாஸ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார். 


மக்கள் கருத்து

adminமே 14, 2021 - 08:24:56 AM | Posted IP 108.1*****

ennapa solra

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory