» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை திடீர் சாவு : போலீசார் விசாரணை

சனி 15, மே 2021 9:00:23 AM (IST)

சேரன்மாதேவி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை திடீரென்று இறந்தார்.

சேரன்மாதேவி அருகே பத்தமடை மங்கையர்கரசி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் திருச்சுணன். இவருடைய மகன் மதியழகன் (32). இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சேரன்மாதேவி சுண்ணாம்புக்கல் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகள் காஜல் (24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, மதியழகன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் காலை உணவு சாப்பிட்டார். பின்னர் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மதியழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory