» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற கணவர் கைது

சனி 15, மே 2021 9:10:41 AM (IST)

விளாத்திகுளம் அருகே மனைவியை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மார்த்தாண்டம் பட்டி மேல தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (50) மனைவி தங்க மாரியம்மாள் (33). குடும்ப பிரச்சனை காரணமாக பழனிச்சாமி தனது மனைவி தங்க மாரியம்மாளிடம் அடிக்கடி  தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் பழனிச்சாமி தனது மனைவி தங்க மாரியம்மாளிடம் தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தங்க மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தார்.


மக்கள் கருத்து

adminமே 15, 2021 - 10:12:59 AM | Posted IP 108.1*****

thaiyal sol kelel

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory