» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மனைவியை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற கணவர் கைது
சனி 15, மே 2021 9:10:41 AM (IST)
விளாத்திகுளம் அருகே மனைவியை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மார்த்தாண்டம் பட்டி மேல தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (50) மனைவி தங்க மாரியம்மாள் (33). குடும்ப பிரச்சனை காரணமாக பழனிச்சாமி தனது மனைவி தங்க மாரியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் பழனிச்சாமி தனது மனைவி தங்க மாரியம்மாளிடம் தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தங்க மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தார்.
adminமே 15, 2021 - 10:12:59 AM | Posted IP 108.1*****