» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பைக்கில் புகுந்த பாம்பு சிக்கியது
சனி 15, மே 2021 10:29:04 AM (IST)
தூத்துக்குடியில் மோட்டார் பைக்கிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தூத்துக்குடி ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் முருகன் (43) இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அவர் வீட்டருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து விழுந்த பாம்பு ஒன்று பைக்குக்குள் புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தூத்துக்குடி டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகள் சகாயராஜ் மற்றும் சிவசுப்பிரமணியன் தலைமையில் 5 வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பைக்கில் செய்து நீண்ட நேர சோதனைக்கு பின்னர் சுமார் 3அடி நீளமுள்ள பாம்பினை உயிருடன் மீட்டனர். பைக்கில், பாம்பு புகுந்த தகவலை அறிந்து முழு ஊரடங்கினையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அந்தப்பகுதியில் திரண்டனர். அந்த பாம்பை தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இதனால் அந்த பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
helloமே 15, 2021 - 02:08:08 PM | Posted IP 162.1*****