» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் திட்டம் துவக்கம்
சனி 15, மே 2021 11:33:08 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் திட்டத்தினை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உணவு வழங்கும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கிவைத்து முன்கள பணியாளர்களிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
kumarமே 15, 2021 - 01:37:34 PM | Posted IP 173.2*****