» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இஸ்ரோ குழு ஆய்வு
சனி 15, மே 2021 7:42:17 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இஸ்ரோ குழு நேரில் ஆய்வு செய்தது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொ்லைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழு ஈடுபட்டது. இந்நிலையில், ஸ்டொ்லைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த தொழிநுட்ப குழுவினரும் பழுதை சரி செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனா்.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து இஸ்ரோ குழு நேரில் ஆய்வு செய்தது. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய இஸ்ரோ நிபுணர்கள் குழு சில ஆலோசனைகளை வழங்கினர். இஸ்ரோ குழு வழங்கிய ஆலோசனைகளால் கோளாறை சரி செய்வதற்கு உதவிகரமாக இருந்தது எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
adminமே 15, 2021 - 07:46:18 PM | Posted IP 162.1*****