» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் ஸ்டேட்டஸ் - 3 பேர் கைது!
சனி 12, ஜூன் 2021 4:50:01 PM (IST)
வாசுதேவநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் கொலை மிரட்டல் ஸ்டேட்டஸ் வைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர் .
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேல சங்கனாப்பேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் வீரதுரை (16), வாசுதேவநல்லூர் சேர்வராயன் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் பாலதினேஷ் (16), மேல சங்கனாப்பேரி இந்திரா காலனியை சேர்ந்த வீராசாமி மகன் மாரி துரை (21) ஆகியோர் மதுரை விமான நிலையத்திற்கு தாங்கள் குறிப்பிடும் தலைவரின் பெயரைத் தவிர மற்ற பெயரை சூட்டினால் வாசு., அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலை துண்டிக்கப்படும் என கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து தீ கட்சி உறுப்பினர் வாசுதேவநல்லூர் மஞ்சணத்தி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மருதுபாண்டியன் (25) என்பவர் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வீரதுரை, பாலதினேஷ், மாரிதுரை ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.